தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Monday, January 13, 2014

பிரம்மாஸ்த்திரம் - அணு ஆயுதம் மேற்குலகமே வியப்பில் ஆழ்ந்த பேருண்மை.

பெருமை கொள்ள வைத்த பேருண்மை. விஞ்ஞான வளர்ச்சியில் வித்திட்டு இன்றைய அணு ஆயுத்தத்தை அன்றே பிரயோகித்த இந்து மதத்தின் பேருண்மை.

அன்று மகாபாரதத்தில் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் அணு ஆயுத்தத்தினை ஒத்தது என்று கண்டறியப்பட்டுள்ளது






பிரம்மாஸ்த்திரம் - அணு ஆயுதம் மேற்குலகமே வியப்பில் ஆழ்ந்த பேருண்மை.

பெருமை கொள்ள வைத்த பேருண்மை. விஞ்ஞான வளர்ச்சியில் வித்திட்டு இன்றைய அணு ஆயுத்தத்தை அன்றே பிரயோகித்த இந்து மதத்தின் பேருண்மை.
அன்று மகாபாரதத்தில் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம் அணு ஆயுத்தத்தினை ஒத்தது என்று கண்டறியப்பட்டுள்ளது






Saturday, January 11, 2014

மெளனமாக இருக்காதீர்கள்!

கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சண்டைபோடும் தம்பதியர், அதி விரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொள்வதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்கள் ஆவதும் கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை. 



ஏனென்றால், மெளனம் என்பது ஒரு கூர்மையான் ஆயுதம். அதனை முறையான சரியான விடயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன் - மனைவிக்கிடையில் சண்டை வரும் போது இருவரும் மௌனமானது பெரும் ஆபத்தாகும்.

ஏனென்றால் மௌனமாக இருக்கும் போது, மூளையில் இனம் புரியாத ஒரு சக்தி அமர்ந்து கொள்ளும். காதலிக்கும் போது நடந்த விடயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பது தான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விடயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.
மேலும் இருவரும் மௌனமாக இருப்பதால் யார் முதலில் பேச வேண்டும் என்ற தற்பெருமை வளர்ந்து வெட்டமுடியாத பெரிய மரமாக மாறிவிடும். 

முதலில் அவர் தான் பேச வேண்டும் என இவரும், இவர் தான் பேச வேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைக்குப் போய்விடுவார்கள். அதற்குப் பின் சமாதானம் என்பது சற்றே கடினமானது. 

அதனால் ஏதாவது பிரச்சினை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், ஆனால் அமைதியாக மட்டும் இருந்து விடாதீர்கள். கதையுங்கள், கதைத்துக் கொண்டேயிருங்கள்.

                                                 ************ நன்றி************

ஆண் பெண்ணின் அகப்புறச் சூழல்

     எத்தனைத் தான் காலம் மாறினாலும் இன்றும் மனித உழைப்பை உறிஞ்சும் அவலம் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அது காலத்திற்க்கேற்ப கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
     சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்திற்கு என் நண்பனைக் காணச் செல்ல நேர்ந்தது. மக்களை இணைக்கும் சேவையில் இருக்கும் அந்த பிரமாண்டமான நிறுவனத்தில் வேலை செய்வதையே பெருமையாகக் கருதுபவர்கள் பலர். ஒரளவு படித்த மாணவமாணவிகளையும் உடனே வேலைக்கு அமர்த்தும் நிறுவனமாக அந்த சுத்து வட்டாரத்தையே கவர்ந்து கொண்டிருக்கிறது அது.
     பத்தாவது வரை கூடப் படிக்காத ஆண் பெண்களும் அந்த நிறுவனத்தில் வேலைப் பார்ப்பது மிகச் சுலபம். அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்க்கும் மேல் இருக்கும். காலை, மாலை என்று பணி மாற்ற அடிப்படையில் அங்கு 24 மணி நேரமும் வேலை நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல என்று நீங்கள் நினைக்கலாம்.
     இயந்திரத்தினிடையே எட்டு மணி நேரத்திற்கும் மேல் நிற்பது ஆணுக்கு ஒன்றும் புதிதல்ல...

     ஆனால் இப்பொழுது எல்லாத் துறையிலும் ஆணுக்கு நிகராகப் பெண்களும் வேலைப் பார்ப்பதால், இந்த வேலையை அவர்களும் பார்க்கத் துணிந்துவிட்டார்கள். எனவே சில ஆண்டுகளாகவே அவர்களும் இயந்திரங்களுக்கு இடையே வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள். காரணம் 80% அவர்களின் குடும்ப சூழலுக்காகவும், 20% பொழுது போக்குக்காகவும் இந்த வேலையை செய்யத் துணிகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேலைச் செய்யும் இந்த இடத்தில் இவர்களுக்குள்ளான உறவுகள், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் நிறைந்ததாய் இருக்கிறது.
     இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஒரு பெண்ணிடம் பேசுகையில் அவள் சொன்ன விஷயங்கள் என்னை மிகவும் அவர்களை எண்ணி வருத்தப்பட வைத்துவிட்டது. ஆம் பகல் 6 மணிக்கு சென்று அந்த எந்திரத்தை இயக்க ஆரம்பித்துவிட்டால், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அங்கு பணி நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறைந்தது 8 மணி நேரமேனும் வேலைப் பார்க்கும் பெண்கள் , இயந்திரங்களின் நடுவே நின்றுவிட்டால் இயற்கை உபாதைகளுக்குக் கூட வேறொருவரின் உதவியைத் தான் நாட வேண்டியிருக்கும். ஏனெனில் தொடர்ச்சியாக இயங்கும் அந்த இயந்திரத்தை விட்டுச் செல்ல வேண்டுமானால் வேறு யாரையேனும் உதவிக்கு நிற்க வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.
     இருபாலரும் வேலை செய்யும் அந்தச் சூழலில் பெண்கள் அருகில் இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை. ஆண்கள் இருந்தால் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். பெரும்பாலும் பள்ளியை கடந்தோ,அல்லது துறந்தோ வேலைக்கு வரும் பெண்கள் தான் அங்கு அதிகம். எனவே தங்களின் நிலைமையை அதுவும் ஓரளவு தங்களின் வயதுடைய ஆண்களிடம் எப்படிச் சொல்வர். அதற்கான பக்குவம் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் அதுவும் அந்த வயதில் வருவதற்கில்லை. அப்படி வந்தாலும் அதை நட்பு ரீதியிலோ,சகோதரத்துவ முறையிலோ பார்த்து உதவும் மனப்பான்மை ஆண்களிடம் அவ்வளவு எளிதில் வருவதே இல்லை. இருப்பினும் உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டுத் தானிருக்கிறது.

     இந்த சூழ்நிலையே பெண்களுக்கும் ஆண்களுக்குமான உறவை வளர்க்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் 16ல் இருந்து 20 வயதிற்க்குள் இருக்கும் ஆண்களும் பெண்களும் பழக நேர்கையில் பெரும்பாலும் நிறைய தகாத நட்பு தான் வளர்கிறது.பெண்கள் ஆண்களிடம் நட்புக் கொண்டே ஆக வேண்டிய சூழலில் உள்ளனர். பக்குவப்பட்ட நட்பு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கும் அந்த சூழலில், வயதின் காரணமாக நிறைய தவறுகள் நடந்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.
     எனக்குத் தெரிந்து அந்தப் பெண் சொன்ன தகவல்கள் மட்டுமின்றி அங்கு வேலை செய்யும் நிறைய ஆண்களிடமும் பேசுகையில் எனக்குத் தெரிந்தது எல்லோருக்குமே நிறைய காதலன், காதலிகள் இருக்கிறார்கள். இந்த உறவு மனதளவில் மட்டுமில்லாமல் இன்றைய நவநாகரிகயுகப்படி கந்தர்வ முறைப்படியும் சேர்ந்துவிடுகின்றனர். வயதிலும் மனதிலும் பக்குவப்படாமலும்,போதிய கல்வியறிவின்மையாலும் தத்தளிக்கும் இவர்களின் கையில் காசு வேறு கிடைத்து விடுவதால், வேலைக்கு சேர்ந்த சிறிது காலத்திற்க்குள் ஆணும் பெண்ணும் சரியோ தவறோ, தனக்கானத் துணையைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள்.

     போதாக் குறைக்கு இவர்கள் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் தூங்கிக் கொண்டு இருப்பதால், குடும்பத்தாருடனான இவர்களது நெருக்கம் அறவே தளர்ந்துவிடுகிறது. இதுவும் இவர்கள் மனது அலைப் பாய வழி வகுக்கிறது. விழித்திருக்கும் நேரமும் அலைப்பேசியுடனேயே சென்றுவிடுகிறது. இதில் 100ல் 50சதவீத ஆண் பெண் உறவுகள் தற்காலிக தேவைக்காகவோ, பொழுதுப்போக்கிற்காகவோ, ஆதாயம் கருதியோ ஏற்படுகிறது. எனவே இந்த உறவில் ஆணோ, பெண்ணோ தன் தேவை முடிந்தவுடன், உறவை முறித்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதில் என்ன புதுமை ?இந்த நிகழ்வுகள் இன்று நாடு முழுவதும் நடப்பது தானே என்று நீங்கள் கேட்கலாம்.
     ஆம். நாடு முழுவதும் நடப்பது தான்,இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த உறவுகள், பெரும்பாலும் ஒரளவு கல்லூரியிலோ, கல்லூரிப் படிப்பு முடிந்து வேலையிலோ நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இது வரை எல்லோரும் இந்த வாழ்க்கை முறை கணினி சம்பந்தப்பட்ட தகவல் தொழில் நுட்ப பணிகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்களிடமே இருந்தது என்றிருந்தோம்.
     ஆனால் இது அடி மட்ட தொழிலாளர்கள் வரை சென்றுவிட்ட்து. நாளடைவில் இது ஒட்டு மொத்த தமிழக கலாச்சாரமாகவே மாறும் அபாயமிருக்கிறது.
     நன்கு படித்து நல்ல பணிகளில் உள்ள ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலேயே இன்று பக்குவப்பட்ட நட்புக்கான சாத்தியக் கூறுகள் அரிதாகவே இருக்கிறது. அப்படியிருக்க முறையான கல்வியறிவின்றி, பக்குவபடாத வயதுடனும்,மனதுடனும் கடினமான இயந்திரங்களின் நடுவே வேலைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல நட்பிற்கான சாத்தியக் கூறுகள் இருக்க வாய்ப்பு குறைவே...
     அப்படியே நிகழ்ந்தாலும் அதை தவறாகப் பயன்படுத்தவே அவர்களின் வயதும் மனதும் அந்த சூழலும் தூண்டுகிறது. இதற்கெல்லாம் என்னக் காரணம்? அரசாங்கத்தின் மீது பழிப் போட்டுவிடலாமா?
     எப்படி எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தின் மீது பழிப் போடுவது.
ஒரு தாளை நகல் எடுக்கச் செல்லும் இடத்தில் இருக்கும் பெண்மணிகளை நீங்கள் கவனித்ததுண்டா? உட்காருவதற்கு கூட இடம் இல்லாத இட்த்தில் தான் பலர் இப்படிப்பட்ட கடைகளை பெரும் பாலும் நடத்துகிறார்கள். அங்கு கழிவறைக்கான வசதிகள் பெரும் அளவு இருப்பதில்லை. இது நிறைய இடங்களில் பெண்களுக்கான சாபக் கேடு. இன்னும் நம்முடைய சமூக சூழலே பெண்கள் வெளியில் உலவுவதற்கான அத்தியாவசிய தேவைகளை பெற்றிருக்கவில்லை. அப்படியிருக்க பெண்கள் சமூகம் திடீரென வெளியில் வந்ததால் குறிப்பாக நம் தமிழகம் மிகவும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
     ஏனெனில் நீண்ட காலமாக பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டு, திடீரென வெளியில் கல்வி, பணி, சேவையென்று வந்துவிட,அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் வெளிச்சமூகத்தில் இன்றும் பூர்த்திச் செய்யப்படாமலேயே இருக்கிறது. 

     அப்படியிருக்க இந்த பிரச்சினைகளை சந்திக்கும் வேளைகளில் எதிர்பாலரான ஆண்களையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆண்களுக்கும் இது ஒரு புது அனுபவம். பெண்களை வீட்டிற்குள்ளேயே பார்த்துவிட்டு வெளிச்சூழலில் பார்க்க நேரிடும் பொழுது, அவர்களின் சில இயலாமைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே இந்த சூழலுக்கு ஆண்களும் பெண்களும் பழகுவதற்குள்ளேயே நாம் வெளி நாட்டு நிறுவனங்களையெல்லாம் கூவி  அழைத்து விட்டோம்.
     தன்னிலை அறியாத தலைமுறையை வளர்த்துவிட்டோம். இங்கே இப்பொழுது இந்தியர்களும் இல்லை,தமிழர்களும் இல்லை எந்த கலாச்சாரமும் இல்லை. வெறும் பணத்தை எப்படித் தேடிக் கொள்வது என்ற முனைப்பு மட்டும் தான் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் மட்டும் தான் சொல்லித் தரப் பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே ஒரு பெண் 50 ஆடவர்களை ஏமாற்றிவிட்டாள்ஒரு ஆண் 10 பெண்களை ஏமாற்றிவிட்டான் எனபதெல்லாம் ஆச்சர்யத்திற்குரிய செய்தியே இல்லை. ஏனெனில் இது பத்திரிக்கை செய்தியாக இல்லாமல் தினமும் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்ந்துக் கொண்டு தானிருக்கிறது. நம் சமூக கட்டமைப்பு சரியானால் ஒழிய இந்த பிரச்சினை தீரப் போவதில்லை.சரியாகுமா...? வழிகள் உண்டு தொடர்ந்துப் பார்ப்போம்

புரிதலுடனான உறவுகளே அவசியம்.


படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்

பரிதவிப்பு.....

பழகியவருக்கும் தெரியவில்லை-இவன்

மனத்துடிப்பு...

விலகியது உன் அன்பு 
 
போதாது என்று அல்ல...

நீ கொண்ட அன்பு

அளவு கடந்துவிட்டது என்பதற்காக...

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

வாழ்க்கை என்னும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோக்ஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும் விரும்புகின்றோம். மனதுக்கு பாரமான எந்தவொரு கவலையான சம்பவங்களையும் மறக்கவே முயற்சிக்கின்றோம்.

சந்தோக்ஷமாயினும் சரி துக்கமாயினும் சரி புரிதலுடனான ஓர் உறவின் அல்லது உறவுகளின் அவசியத்தினை மனம் எப்போதும் உணர்த்திக்கொண்டிருக்கும். 
மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய இன்பங்களில் பங்கெடுத்து துன்பங்களில் தோள்கொடுக்கக்கூடிய உறவுகள் கிடைக்கப்பெறுவதானது அதீத சந்தோக்ஷத்தை தரக்கூடியது எனலாம். அந்த உறவுகள் தாய், தந்தை, சகோதர சகோதரிகளாகவோ, உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, தொழில் நிலையானவர்களாகவோ, காதலன் காதலியாகவோ இருக்கலாம்.

சிலர் குறைவாகப் பேசுவார்கள், ஆனால் அவர்களை உறவினர்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாகப் பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்.  மேலும் சிலர் சந்தித்திருக்கவேமாட்டார்கள் ஆனால் மிகச்சரியான புரிதல் இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்கிறது? ஆம்!
புரிந்துணர்வு எனக் குறிப்பிடுகையில் முதல் நிலையில் வைக்கப்படுவது நம்பிக்கை தான். அது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பத்திரம். நம்பிக்கையின் வெளிப்பாடு அதிகமாக இருக்கையில் அங்கு எதுவித சந்தேகங்களுக்கோ அல்லது தவறான நடவடிக்கைகளுக்கோ இடமிருக்காது. 

நிறைவான  பாசத்தோடான பயணம் அனுமானிக்க முடியாத ஆனந்தத்தை தரவல்லது. ஆனால் அதே பாசம் இடை நடுவில் உடையுமாயின் அதன் வலிகளின் ஆழம் அதிகம். மனதில் ஏதோ ஒரு உருவமற்ற புள்ளியாய் எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த வடு இருந்துகொண்டேதான் இருக்கும்.

உதாரணமாக : பழகிய நாடகளை என்னும் போது, பழகியவர்கள் ஞாபகப்படுத்தும் போது , நாம் பழகியது போல் வேறுயாரையும் கண்டாலோ மனதின் வலியின் கொடுமையை ஈடுகட்ட முடியாது.

ஆதலால் உறவுகள் தேவைப்படும் அதேவேளை அதற்கேற்ற புரிதல்களும் அவசியமாகிறது. 

உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அன்பு விட்டுக்கொடுப்பு ஆகிய பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பைவிட சிறந்த ஆயுதம் இல்லை என்பார்கள். எதையும் அன்போடு அணுகும் போது அதன் பிரதிபலனும் அன்பாகவே கிடைப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருப்போம். 
பரிமாணங்கள் பலவற்றோடு பிறருக்கு கொடுக்கக்கூடிய உயரிய சந்தோக்ஷமான அன்பினை எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பகிர்தல் வேண்டும். அன்பு நிறைந்த தூய உள்ளம் அமைதி வாழும் திருக்கோயில் என்று சொல்லப்படுவதுண்டு. 

அதேபோல் விட்டுக்கொடுப்பதிலும் நிறைவான திருப்தியைக் காணமுடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும் போது மனம் இலகுதன்மையை உணரும். இது காலப்போக்கில் சுவையான சம்பவங்களை மனதில் இருத்திக்கொள்ள உதவும். நெருக்கமான உறவுகளை விரிசல் இன்றி பேணுவதற்கு விட்டுக் கொடுப்பு அவசியமாகும். நல்ல  உறவுகளில் விரிசல் ஏற்படுமாயின் அல்லது விரிசல் ஏற்படுவதற்கான காரணம் தெரியுமாயின் வாய்விட்டுப் பேசுவதே சிறந்தது. தவறான மதிப்பீடுகளில் இருந்து விலகிக்கொள்ளவும் நியாயமான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அதிலும் கோபங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவருக்குப் புரியும் வகையில் அமைதியாக எடுத்துக்கூற வேண்டும். 
 நாம் பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்க்கும்போது அணைத்துமே பச்சையாகத் தெரிவது போல சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் போது அவ்வாறே தெரியும். ஆதலால் அவற்றிலிருந்து வெளிப்படையாக பேசித்தீர்மானிப்பது சிறந்தது.

நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரில் அல்லது பலரில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை எவரும் மறுக்க முடியாது. பெரும்பாலும் ஒவ்வோர் சின்ன விடயங்களுக்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உடை அணியும் ஆடை, ஆபரணங்கள் என்று அணைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் உதவி தேவைப்படுகிறது.  உறவுகள் எமக்கு அவசியம். 

தனியான வாழ்க்கைப் பயணத்தைவிட காத்திரமான நல்ல உறவுகளோடு வாழ்க்கையைத் தொடருவது தேகத்திற்கும் இதயத்திற்கும் நிறைவான மகிழ்ச்சியைத் தரும். ஆதல்லால் உறவுகளில் விரிசல்கள் வேண்டாமே. சிறந்த முறையில் ஆனந்தமாக வாழப்பழகிக்கொள்வோம்.


அளவுகடந்த அன்பும் அளவுகடந்த எதிர்பார்ப்பும் நல்ல ஒரு புரிந்துணர்வுடனான உறவினை மேற்கொள்வதற்கு தடையாகவே அமையும். இது நான் என் அனுபவரீதியாக உணர்ந்தது.

                                                                                                                       .

புதிய ஸ்மார்ட்ஃபோன் வகைகளை மைக்ரோமெக்ஸ்யில் அறிமுகம் செய்யும் மைக்ரோமெக்ஸ்

இந்­தி­யாவின் முன்­னணி கைய­டக்க தொலை­பேசி உற்­பத்தி நிறு­வ­ன­மான மைக்­ரோமெக்ஸ் நிறு­வனம் அதன் கேன்வாஸ் தொடரில் 3G அண்ட்­ரொயிட் தொழில்­நுட்­பத்தில் அமைந்த புதிய 45 அங்­குல A74 Canvas Fun மற்றும் 5 அங்­குல A76 Canvas Fun ஸ்மார்ட்ஃபோன் வகை­களை அறி­முகம் செய்­துள்­ளது.
இவ்­விரு ஸ்மார்ட்ஃ­போன்­க­ளிலும் முன் ஏற்­றப்­பட்ட ஆப்­ளி­கே­ஷன்கள், Tiled Notification மற்றும் முழு­மை­யான திரை தெளி­வுத்­தி­ற­னுக்கு மேல­தி­க­மாக சிறந்த பயனர் இடை­முகம் வச­திகள் காணப்­ப­டு­கின்­றன. அண்ட்­ரொயிட் 4.2.2 ஜெல்லி பீன் சிஸ்­டத்தில் இயங்­கு­வ­தனால் பாவ­னை­யா­ளர்கள் தாம் விரும்­பிய Google Play பயன்­பா­டு­களை தர­வி­றக்கம் செய்­து­கொள்ள முடியும்.
5 மெகா­பிக்செல் பின்­க­மரா மற்றும் 0.3 மெகா­பிக்செல் முன்­க­மரா மூலம் வீடியோ அழைப்பு மற்றும் Chats களை மேற்­கொள்ள முடி­வ­துடன், பாவ­னை­யா­ளர்கள் தமது மகிழ்ச்­சி­யான தரு­ணங்­களை உச்ச தெளி­வுடன் படம் பிடித்து வைத்­துக்­கொள்ள முடியும்.
மேலும் எந்­நே­ரத்­திலும் கோப்­புக்­களை பகிர்ந்­து­கொள்ளக் கூடிய வகையில் Bluetooth 2.0, Wi-Fi, USB 2.0 மற்றும் GSP ஆகி­யன நெட்வொர்க் இணைப்­பிற்கு உத­வு­கின்­றன. இவ்­விரு கைத்­தொ­லை­பே­சி­களின் உள்­ளக மெம­ரியை 32 GB வரை விஸ்­த­ரித்­துக்­கொள்ள முடியும். A74 மற்றும் A76 இலுள்ள 1.3 GHz மற்றும் 1.3 1.3 GHz dual core processor சிப் இனை கொண்­டுள்­ள­தனால் அதி­வே­க­மான கேமிங் அனு­ப­வத்தை பெற்­றுக்­கொள்ள முடியும்.
A74 ஆனது 1500 mAh மற்றும் A76 ஆனது 2000 mAh பேட்­டரி செயற்­தி­றனை கொண்­டுள்­ளது. தமது வடி­வ­மைப்­புக்­களின் தரத்தை அதிகரிக்கும் வகையில், Mystic Blue, Raging Red மற்றும் Midnight Black போன்ற 3 வர்ணத்தெரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாணவனின் முகத்தில் 6 அங்குலத்திற்குப் புதைந்த ஈட்டி

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த  பாடசாலையொன்றில் ஈட்டி எரிதல் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாணவனின் முகத்தில் ஆறு அங்குலத்திற்கு ஈட்டி புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

எம்பிலிப்பிட்டிய, பனாமுற வித்தியாலயத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் பிரிதொரு மாணவன் வீசிய ஈட்டி கயான் மதுசங்க என்ற மாணவ தலைவனின்  முகத்தில் இடது பக்க கண்ணுக்கருகில் பட்டு  உற்புகுந்துள்ளது.
உடனடியாக முகத்தில் உள்ள ஈட்டியுடன் மாணவனை எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச்சென்ற வேளையில் அங்குள்ள வைத்தியர்கள் ஈட்டியின் ஒரு பகுதியை மெதுவாக வெட்டி அகற்றியுள்ளனர்.  உட்புகுந்த ,மிகுதி பகுதியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குறித்த மாணவனை அனுப்பிவைத்துள்ளனர்.